ஹம்ஸா நீக்கம் அவசர முடிவு அல்ல! - பெர்சாத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 17: பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினர் Razali Idris ஹம்ஸா ஜைனுடின் நீக்கம் அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

திரெங்கானு பெர்சாத்து தலைவருமான அவர், கட்சியின் ஒழுக்கக்குழு முறையாக விசாரணை நடத்தி, ஹம்ஸாவிற்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பும் வழங்கியதாக கூறினார்.

ஹம்ஸா, 2025 ஆண்டு பொதுக்கூட்டத்தை சிதைக்க முயன்றதாகவும், கட்சி தலைமையை பாதித்ததாகவும் வந்த புகார்களின் பேரில் ஒழுக்கக்குழுவில் ஆஜராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்ததால் விசாரணையில் பங்கேற்கவில்லை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், Noh Omar, ஹம்ஸா மற்றும் மேலும் 16 தலைவர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

ஹம்ஸா நீக்க முடிவுக்கு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், Muhyiddin Yassin மற்றும் Hamzah Zainudin இடையேயான தலைமையியல் போட்டியே இந்த விவகாரத்திற்குக் காரணம் என ரஸாலி குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *