கெந்திங் ஹைலேண்ட்ஸில் வாகனஓட்டியைத் தாக்கிய நபரை கைது செய்து ஜாமீனில் விடுவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 9:

சமீபத்தில் கெந்திங் ஹைலேண்ட்ஸில் வாகனம் ஓட்டிச் சென்றபோது, ஒரு வாகன ஓட்டியைத் தாக்கியதாகக் கூறப்படும் 24 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்டவர் கெந்திங் ஹைலேண்ட்ஸிலிருந்து சுபாங் ஜெயாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக பெந்தோங் காவல்துறைத் தலைவர் ஜைஹாம் கஹார் தெரிவித்தார்.
சந்தேக நபர் தனது காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று, பலமுறை பிரேக்குகளை அழுத்தி, பாதிக்கப்பட்டவரின் வழியைத் தடுத்ததாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரின் வாகனத்தை முந்திச் சென்ற பிறகு, சந்தேக நபர் துரத்திச் சென்று பாதிக்கப்பட்டவரின் வாகனத்தின் பின்புறத்தில் மோதினார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.சந்தேக நபர் திடீரென பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அடித்தபோது, இரு ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கினர்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் கழுத்திலும் காயம் ஏற்படுத்தியதாக ஜைஹாம் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் - 22 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் - வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.இதனை அடுத்து மாவட்ட காவல் தலைமையகத்தில் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். அவர் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *