RON95 பெட்ரோலைத் திருட முயன்றவர் கைது!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 20: பினாங்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு (KPDN) அமைச்சின் அதிகாரிகள் நேற்று இரவு 750 லிட்டர் RON95 பெட்ரோலைத் திருட முயன்ற ஒருவரைக் கைது செய்தனர்.

இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நான்கு சக்கர வாகனத்தில் கூடுதல் டேங்கில் RON95 பெட்ரோலை நிரப்பும் போது அவர் கைது செய்யப்பட்டார்.

இரவு 9:15 மணிக்கு பெட்ரோல் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. மானிய விலையில் எரிபொருளை முறைகேடாக பயன்படுத்துவதை  உளவுத்துறை கண்டறிந்தது என்று மாநில KPDN இயக்குனர் எஸ் ஜெகன் கூறினார்.

உளவுத்துறையின் அறிவிப்பின்படி நான்கு அமலாக்க அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்று டொயோட்டா ஹைலக்ஸ் காரைக் கண்டுபிடித்தனர். அதன் ஓட்டுநர் RON95 பெட்ரோலை கூடுதல் டேங்கில் நிரப்பிக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர்.

இதனை அடுத்து, 35 வயதான உள்ளூர் ஆடவர் தடுத்து வைக்கப்பட்டார், மேலும் அவரது வாகனம், கொள்முதல் ரசீது மற்றும் அலைபேசியும் கைப்பற்றப்பட்டதாக அவர்  கூறினார்.

கைப்பற்றப்பட்ட பெட்ரோலின்  மதிப்பு  1,537 வெள்ளி 50  காசு என மதிப்பிடப்பட்டுள்ளது, கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ர 37,337 வெள்ளி என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *