வங்காள தேசத்திற்கான பயணத்தை ரத்து செய்யுங்கள்! - வெளியுறவு அமைச்சு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 8: வங்காளதேசத்திற்கான அனைத்து பயணங்களையும் மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

வங்காள தேசத்தில் தொடர்ந்து நிலைமை பதற்ற நிலையில் இருப்பதால் தங்கள் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது என ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்தில் அந்நாட்டுப் பிரதமர் தப்பி ஓடிய நிலையில், நிலையற்ற சூழல் அங்கு நிலவுகிறது.

இதனை அடுத்து அங்குள்ள நிலவரத்தை  தூதரகத்தின் வாயிலாக அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *