ஆஸ்திரியா நாட்டு கலைஞர்கள் மயங்கி பாடும் வந்தே மாதரம் பாடல்!

top-news
FREE WEBSITE AD

 ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு சென்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

1983ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆஸ்திரியாவுக்குச் சென்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலான 75 ஆண்டுகால நட்புறவைக் கௌரவிக்கும் வகையில் இந்திய பிரதமர் மோடியின் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று வியன்னா சென்ற இந்திய பிரதமர் மோடியை வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹ்ஹம்மர், இந்திய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்தளித்தார். அப்போது ஆஸ்திரிய அதிபர் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து, ஆஸ்திரிய நாட்டு இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் இசைக் கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை இசைத்தனர். இதனை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *