கினபாலு மலையில் நிலச்சரிவு!

top-news
FREE WEBSITE AD

ரானாவ், ஜூன் 24: கினாபாலு மலையில நிலச்சரிவு நிகழ்ந்துள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கினபாலு மீட்புத் துறை நிலையத் தலைவர் ரித்வான் முகமது தைப் உறுதிப்படுத்தினார்.

அவசர அழைப்புகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை. இருப்பினும், வீடியோவைப் பெற்ற பிறகு, தாங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

சபா பூங்கா அதிகாரியின் கூற்றுப்படி, ஜூன் 23 அன்று அதிகாலை 1.20 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அதே நாள் அதிகாலை 5 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது என்று கூறினார். அதிர்ஷ்டவசமாக அருகிலுள்ள கிராமங்களைப் பாதிக்கவில்லை!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *