RM 1,68,020 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்! செர்டாங் போலீஸார் அதிரடி நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD


(இரா.கோபி)

செர்டாங், ஜூலை 18: செர்டாங் மாவட்ட போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்ட  அதிரடி நடவடிக்கையில்  இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து  1 லட்சத்து 68 ஆயிரத்து 20 வெள்ளி மதிப்புள்ள கஞ்சா வகை போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி  ஏ. ஏ.அன்பழகன் தெரிவித்தார்.மேலும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஆரம்பக் கட்ட விசாரணையில் , அண்டை நாடுகளில் இருந்து  அவை தருவிக்கப்பட்டது தெரியவந்ததாகவும், பிடிபட்ட இருவரும்
 போதைப்பொருள் சப்ளையர் என்றும் அவர் கூறினார்.

கிள்ளான்  பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள சந்தைக்கு அவர்கள் விநியோகம் செய்து வந்ததாகவும், கடந்த  6 மாதங்களாக இது  செயலில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப் பொருட்களை 108,438 போதைப்பித்தர்கள்  உபயோகிக்கலாம்  என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
பிடிபட்ட இருவரும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *