வங்கி பரிவர்த்தனைக்கு வங்கிகளே பொறுப்பு! - துணை நிதி அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 9: அங்கீகரிக்கப்படாத வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு வங்கிகள் பொறுப்பு என்றும், மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது சுமையை மாற்ற முடியாது என்றும் துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஸ்டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சியெங் ஜென்க்கு பதிலளித்த லிம், வாடிக்கையாளர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு விவரங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லாவிட்டால், ஆன்லைன் வங்கி மோசடியால் ஏற்படும் இழப்புகளுக்கு வாடிக்கையாளர்களைக் குறை கூறக்கூடாது என்று லிம் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மோசடி வழக்கும் முழுமையாக விசாரிக்கப்படும். வங்கியின் அமைப்பு அல்லது இடர் மேலாண்மை நடைமுறைகளில் உள்ள பலவீனங்களால் ஒரு வழக்கு விளைந்தால், அந்த இழப்பை வங்கி ஏற்க வேண்டும்  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *