வான் ஆரிப்-யாப் ராய் கிங் பாரிஸ் உலக பூப்பந்து போட்டியில் பதக்கம் வெல்வதற்கு உறுதி!
- Muthu Kumar
- 14 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 14-
மலேசிய ஆடவர் இரட்டையர் கூட்டணியான வான் ஆரிப் வான் ஜுனைடி-யாப் ராய் கிங், ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பாரிஸில் நடைபெறவுள்ள உலக பூப்பந்து போட்டியில் பதக்கம் வெல்வதற்கான தங்கள் கனவை நனவாக்க உறுதியுடன் உள்ளனர்.
'அண்டர்டாக்' என்ற அந்தஸ்தில் களமிறங்கினாலும், அது தங்களுக்குத் தடையாக இருக்காது என்று இந்த உலக தரவரிசை 22ஆவது இடத்தில் உள்ள கூட்டணி நம்புகிறது.இந்தப் புதிய கூட்டணி, உலகின் முன்னணி இரட்டையர் கூட்டணிகளை வீழ்த்தி, ஆச்சரியமான வெற்றியைப் பதிவு செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இவர்கள் உலகின் உயரிய மேடையில் தங்களது திறமையை நிரூபிக்க விரும்புகின்றனர். சமீபத்தில் மக்காவ் ஓபனில் தங்களது முதல் உலக சுற்றுப்பயண தலைப்பை வென்றது. பாரிஸில் மிகவும் அபாரமாக விளையாடுவதற்கு இவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
மக்காவ் ஓபனில் விளையாடுவதற்கு முன்பு, நாங்கள் உலகப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டோம் என்பது தெரிந்தது. அப்போது, வெற்றி பற்றி அதிகம் யோசிக்காமல், விளையாட்டை அனுபவித்து, எங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம் என்று வான் ஆரிப் தெரிவித்தார். இந்த மனநிலை, அவர்களுக்கு மக்காவ் ஓபனில் வெற்றியைத் தந்தது மட்டுமல்லாமல், பாரிஸில் பெரிய அளவில் போராடுவதற்கு தயாராகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



