டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக்காலம் நீட்டிப்பு!

top-news
FREE WEBSITE AD


 மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி-யின்  தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் மே 12ஆம் தேதியிலிருந்து அவரது பதவி நீட்டிப்பு தொடரும் என்று, அரசாங்க தலைமை செயலாளர் டான்ஶ்ரீ முஹமட் ஸூக்கி அலி தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2020ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையராக டான்ஶ்ரீ அஸாம் பாக்கி நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டம், செக்‌ஷன் 694 பிரிவின் கீழ் மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதலுக்குப் பிறகு டான்ஶ்ரீ அஸாம் பாக்கி மீண்டும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்படுகிறார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *