சனூசி பிரச்னைக்குரியவர்! - ஃபாமி ஃபாட்ஸில் சாடல்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 12: கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி எ பொய்யான கதைகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பினாங்கின் சுங்கை பக்காப்பில் நிலவும் தண்ணீர் பிரச்சனைகள் பற்றி அவர் கூறியது தேசத்துரோகமானது, இனவெறி மற்றும் உண்மைக்குப் புறம்பானது.

அவர் உண்மைகள் இல்லாமல் பேசி வருகிறார். இது நல்ல அணுகுமுறை அல்ல. அவர் பிரச்சனைக்குரியவர், என்று ஃபஹ்மி  இன்று  தனது அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

 கடந்த சனிக்கிழமை சுங்கை பக்காப் இடைத்தேர்தலுக்கான பெரிகாத்தான் நேஷனல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் போது, ​​அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனைகள் குறித்து சனுசி கூறியதை அடுத்து  ஃபஹ்மியிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *