ஜப்பான் பிரதமரான டகைச்சி சனாய்க்கு அன்வார் இப்ராஹிம் வாழ்த்து

top-news

கோலாலம்பூர், பிப். 9-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜப்பான் பிரதமர் டகைச்சி சனாயின் பார்டி லிபரல் டெமோக்ராட்டிக் (LDP)  வெற்றியை வாழ்த்தியுள்ளார். இந்த வெற்றி ஜப்பான் மக்கள் அவரின் தலைமைத்துவத்தில் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும், குறிப்பாக பொருளாதார புதுப்பிப்பு திட்டங்களை முன்னெடுக்க அவர் காட்டிய திறனைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

அன்வார் கூறுகையில், ஜப்பான் பிரதமர் ஆகும் சில நாட்களுக்குப் பின்னர், 2025 அக்டோபரில் நடைபெற்ற ASEAN உச்சிமன்றத்தில் டகைச்சி மலேசியாவுக்கு வந்தார். அப்போது அவர் இரு நாடுகளுக்கும் பொதுவான முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாடி, பொருளாதாரத் திடத்தன்மை, கடல் பாதுகாப்பு ஆகியவற்றில் உறுதியான மனப்பான்மையை வெளிப்படுத்தினார்.

அன்வார் இப்ராஹிம் தனது கருத்தில், மலேசியா மற்றும் ஜப்பான் இடையிலான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் பொதுவான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்களில் தொடர்ந்த ஒத்துழைப்பு மிக முக்கியம் என்றும் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *