ஒற்றுமையாக ஒன்றிணையுங்கள்! அரசியல் தலைவர்களுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு!
- Thina S
- 05 Jun, 2024
மலேசியாவின் வளர்ச்சிக்காக அனைத்து அரசியல் தலைவர்களும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்தால் மலேசியா எந்தவோர் அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
மலேசிய அரசியலில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். பலவகையானத் திட்டங்களும் அதைச் செயல்படுத்தும் உக்திகளையும் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களைக் கொண்ட நாடு மலேசியா.
ஆனால், சில நேரங்களில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாலும் சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும் அவர்களின் மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்கின்றனர்.
மக்கள் நலனும் மலேசியாவின் வளர்ச்சியை மட்டுமே முதன்மையாகக் கொண்டு அனைத்து அரசியல் கட்சியினரும் செயல்பட்டால் மலேசியாவைப் போன்ற ஒரு புனிதமான நாடு உலகிலும் இருக்காது. ஆனால், இதற்கு பேதமின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டும் என அன்வார் அழைப்பு விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *