பெண்ணை மடியில் அமர வைத்து பேருந்து ஓட்டிய நபர்! காணொளியில் சிக்கிய பரிதாபம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 13 விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் , ஒரு பெண்ணைத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்டுவதைக் காட்டும் காணொளி பரவியதைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துத் துறை   விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வைரலாகப்பரவிய அந்தக் காணொளி கண்டறியப்பட்ட உடனேயே விசாரணை தொடங்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனம் மற்றும் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் JPJ-யின் மூத்த அமலாக்க இயக்குநர் கிஃப்லி மா ஹசான் கூறினார்.

இன்று வாக்குமூலம் அளிப்பதற்காக ஓட்டுநர் வரவழைக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார். ஒரு பயணியால் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்தக் காணொளியில், வாகனம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அந்தப் பெண் ஓட்டுநரின் மடியில் அமர்ந்துகொண்டு ஸ்டீயரிங்கைப் பிடித்திருப்பது காட்டப்பட்டது.

ஒரு காரின் டேஷ்கேமிலிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு காணொளியில், பேருந்து ஆபத்தான முறையில் ஒரு வழித்தடத்தில் குறுக்கிட்டுச் செல்வது காட்டப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *