பெண் வழக்கறிஞரின் கால் பகுதியைப் படம் பிடித்தவருக்கு 7 நாள் சிறை!
- Shan Siva
- 10 Apr, 2026
செலாயாங், ஏப் 10: ஒரு பெண் வழக்கறிஞரை இரகசியமாக தகாத முறையில்
புகைப்படம் எடுத்ததற்காக, ஓய்வுபெற்ற ஒருவருக்கு
ஏழு நாட்கள் சிறைத்தண்டனையை செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விதித்துள்ளது.
பிரிவு 509-இன் கீழ் எஸ். ஆனந்தன் என்ற அந்த நபர்
குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் மஹ்மூதா
வி.எம். அப்துல் லத்தீஃப் இந்தத் தண்டனையை வழங்கினார்.
மேலும், நீதிமன்றம் அந்த ஓய்வுபெற்றவருக்கு RM4,000 அபராதம் அல்லது அபராதம் செலுத்தத் தவறினால்
ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்தது.
வழக்கின் விவரங்களின்படி,
ஏப்ரல் 8 அன்று ராவாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் பாதிக்கப்பட்டவர்
உணவருந்திக் கொண்டிருந்தபோது, ஆனந்தன்
தூரத்திலிருந்து அவரது கால் பகுதியைப் புகைப்படம் எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
பின்னர் பாதிக்கப்பட்டவர்
இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தால்
தான் மன அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும், இந்த அனுபவத்தைத் தொடர்ந்து தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



