எந்த அழுத்தத்திற்கும் அடிபணியக்கூடாது! MACC புதிய ஆணையருக்கு வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 26: புதிதாக நியமிக்கப்பட்ட MACC தலைவர் அப்துல் ஹலீம் அமான், அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும் என்றும், அவர் எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நலன்களுக்கோ அடிபணியக் கூடாது என்றும் பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

MACC எந்தவொரு கட்சியாலும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படக்கூடாது என்று அவர் நேற்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

உண்மையிலேயே சுதந்திரமான மற்றும் நம்பகமான ஒரு நிறுவனமாக இந்த ஊழல் தடுப்பு அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை ஹலீம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமருமான அவர் கூறினார்.

MACC விசாரணைகள் பாரபட்சமின்றியும் அரசியல் தலையீடு இல்லாமலும் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாக பெரிகாத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

பொது நலன் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மற்றும் திறமையின்மை அல்லது முறைகேடு தொடர்பான பிரச்சினைகள் வெளிப்படையாகவும் தொழில்முறையாகவும் விசாரிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயேகத்திற்கு எதிரான போரில் பொதுமக்கள் உறுதியான முடிவுகளைக் காண விரும்புகிறார்கள் என்றும் தக்கியுதீன் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *