கபடி போட்டியில் சரவாக் மகளிர் அணி பதக்கம் இல்லாமல் வெளியேறியது!

top-news
FREE WEBSITE AD

 21வது மலேசியா விளையாட்டுப் போட்டியான சுக்மாவில் சரவாக் ஆடவர் கபடி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆரம்பச் சுற்றில் மலாக்காவை எதிர்த்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 21வது மலேசியா விளையாட்டுப் போட்டியின்  அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது சரவாக்.இன்று ஆகஸ்ட் 23 ஆம் தேதி கூட்டரசுப் பிரதேசத்தை எதிர்கொள்கிறது சரவாக் அணி.

பெண்களுக்கான போட்டியில் சரவாக் காலை  வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி பினாங்கை 56-25 என தோற்கடித்தது.முதல் பாதியில் 28-10 என முன்னிலை பெற்று இரண்டாவது பாதியில் தங்கள் ஆட்டத்திறன் மூலம் எளிதாக வெற்றி பெற்றனர்.

இருந்தாலும் கூட்டரசுப் பிரதேசத்திற்கு எதிரான பிற்பகல் ஆட்டத்தில் பெண்கள் அணி பின்னடைவைச் சந்தித்தது.அவர்கள் முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும்  சரவாக் 27-51 என தோல்வி கண்டது.இந்த தோல்வியால் சரவாக் மகளிர் அணி கபடி போட்டியில் பதக்கம் இல்லாமல் ஏமாற்றம் அடைந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *