கோபுரத்தில் ஒட்டிக்கொள்ளும் குப்பை தான் யோகி பாபு - வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி!

top-news
FREE WEBSITE AD

 நடிகர் யோகி பாபு கூறிய ஒரு செய்தி கோடம்பாக்கத்தையே பெரும் பேசும் பொருளாக இருக்கிறது. வலைப்பேச்சு என்ற பெயரில்  youtube சேனல் நடத்தி வரும் அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோர் யோகி பாபுவுக்கு எதிராக சவால் விட்டிருக்கும் செய்திதான் இப்போது பேசும் பொருளாகி வருகின்றது.

வலைப்பேச்சில் யோகி பாபு சில இயக்குனர்களுக்கு டார்ச்சர் செய்து வருகிறார் என்ற வகையில் பேசி இருந்தார்கள்.இது சம்பந்தப்பட்ட இயக்குனர்களே வலைப்பேச்சில் சொல்ல சொன்னார்களாம். ஆனால் யார் அந்த இயக்குனர்கள் என வலைப்பேச்சில் சொல்லவில்லை. இது யோகி பாபு காதுக்கு செல்ல அதைப்பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் யோகி பாபு பேசியதுதான் இப்போது வலைப்பேச்சில் உள்ளவ அந்தணன் மற்றும் பிஸ்மிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது வலைப்பேச்சியில் இருந்து தங்களை கவனிக்க சொல்லுங்கள்.அப்படி கவனித்தால்தான் இந்த மாதிரி இனிமேல் பேசமாட்டோம் என சொன்னதாக யோகி பாபு பேசியிருக்கிறார் இதை கண்டு  அந்தணன் மற்றும் பிஸ்மி கொதித்தெழுந்து யோகி பாபு பற்றிய சொல்லப்படாத செய்திகளை எல்லாம் இன்று அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

அதாவது முன்பு ஒரு முறை யோகி பாபு ஒரு பெரிய நடிகரின் கையை தொட அதற்கு அந்த நடிகர் டோன்ட் டச் என சொன்ன செய்தி பகிரப்பட்டு வந்தது. ஆனால் அந்த நடிகர் யார் என்பதை இவர்கள் சொல்லவில்லை. இதை வலைப்பேச்சில் சொல்ல சொன்னதே யோகி பாபு தானாம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் காசு கேட்டதாக சொல்கிறாரே யோகி பாபு? அவர் குடும்பத்தையும் விட பெரிதாக நினைக்கும் அந்த முருகன் அதாவது திருத்தணிக்கு வர சொல்லுங்கள்.நாங்களும் வருகிறோம். அந்த திருத்தணி முருகன் மீது சத்தியம் பண்ண  சொல்லுங்கள், நாங்கள் காசு கேட்டோமா இல்லையா என்று? வரும்போது அவர் குழந்தையையும் அழைத்துவர சொல்லுங்கள். அந்த குழந்தை மீதும் சத்தியம் பண்ண சொல்லுங்கள்.

நாங்களும் எங்கள் குழந்தைகளின் மீது சத்தியம் பண்ணுகிறோம். எப்படி இப்படியெல்லாம் கூசாமல் பொய் சொல்கிறார் யோகிபாபு? என அந்தனன் கூறினார்.பார்ட்னர் என்ற ஒரு திரைப்படத்தில் காசு வாங்கிக்கொண்டு இவருக்காக அந்த படக்குழுவே காத்திருந்த செய்தி எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு ஐந்து லட்சம் மட்டும் கணக்கில் வாங்கிக்கொண்டு மீதி 20 லட்சத்தை கருப்பு பணமாகத்தான் வாங்குகிறார். இதையெல்லாம் சொன்னால் அவருடைய கெரியரே முடிந்துவிடும் என்று என்ற காரணத்தினால் தான் நாங்கள் இதுவரை சொல்லவில்லை .

ஆனால் இனிமேலும் நாங்கள் சொல்லாமல் இருக்க முடியாது என்றும் பிஸ்மி கூறினார். மேலும் அஜித் தன்னை மோசமாக நடத்துகிறார் என்றும் யோகிபாபு இவர்களிடம் கூறினாராம். அதுமட்டுமல்லாமல் அந்தணனும்,பிஸ்மியும் ஆத்திரத்தில் யோகி பாபுவின் காமெடி நன்றாகவே இல்லை. நீங்கள் ஒரு காமெடி நடிகரும் கிடையாது எனக் கூறியிருக்கிறார்கள். மேலும் தமிழ் சினிமா பல திறமையானவர்களை கோபுரத்தில் தான் வைக்கும். சில நேரங்களில் குப்பைகளும் கோபுரத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு குப்பை தான் யோகி பாபு என கூறி இருக்கிறார்கள்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *