கார் - விரைவுப் பேருந்து விபத்து! ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூன் 18: இன்று அதிகாலை வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் காரும் விரைவுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், கார் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் Km155.9 இல் அதிகாலை 4.36 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,  சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் வந்தபோது, ​​​​
30 வயது பயணி ஒருவர் இருக்கையில் பொருத்தப்பட்டு, சம்பவ இடத்திலேயே கிடந்ததைக் கண்டு மீட்டனர். சம்பந்தப்பட்ட அந்த நபர்  இறந்ததை துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *