மெர்டேக்கா கால்பந்து தொடரின் வெற்றியாளராக ஹரிமாவ் மலாயா வாகை சூடியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 11- 2024 பெஸ்தாபோலா மெர்டேக்கா கால்பந்து தொடரின் வெற்றியாளராக நாட்டின் ஹரிமாவ் மலாயா வாகை சூடியது.

கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில், நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹரிமாவ் மலாயாஅணி 1-0 என்ற கோலில் லெபனானை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலம், ஆசியாவின் மிகவும் பழமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான மெர்டேக்கா கிண்ணத்தை, 13ஆவது முறையாக மலேசியா வென்றுள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் மலேசியா தனது ஒரே கோலைப் போட்டது.இரண்டாம் பாதி ஆட்டத்திலும், ஹரிமா மலாயாவும் லெபனானும் மாறி மாறி கோல்கள் அடிக்க முயற்சித்தன.ஆனால், தத்தம் அணிகளின் தற்காப்பு அரணை உடைக்க முடியாமல் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் இரண்டாம் பாதி நிறைவடைந்தது.1-0 என்ற நிலையில் ஆட்டம் மலேசியாவுக்கு சாதகமாக முடிந்தது.

1957ஆம் ஆண்டில் இப்போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஆகக் கடைசியாக 2013ஆம் ஆண்டில் மலேசியா இக்கிண்ணத்தை வென்றிருந்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *