அதிகாலையில் துப்பாக்கிச்சூடு! இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

பட்டர்வொர்த், ஜூன் 26: இன்று அதிகாலை 2 மணியளவில் பட்டர்வொர்த் சுங்கை லோகானில் உள்ள ஜாலான் பெர்மாத்தாங் பாருவில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டம் 307 மற்றும் ஆயுதச் சட்டம் 1960ன் பிரிவு 8ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அகமது கூறினார்.

ஜாலான் போகோக் சேனா சந்திப்பில் ஜாலான் பெர்மாத்தாங் பாருவை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் மைவி கார்  செல்வதை மாநில கன்டன்ஜென்ட் போலீஸ் தலைமையகம் மற்றும் செபராங் பெராய் உத்தாரா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழு கண்டறிந்தது.

இதனை அடுத்து, வாகனத்தை நிறுத்துமாறு போலீஸார் கட்டளையிட, ஆனால் சந்தேக நபர் மறுத்து, போலிஸாரை நோக்கிப் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் போலீஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக பினாங்கு காவல்துறையால் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tester Mobile App

[email protected]

Tester Mobile App

[email protected]

Tester

jhhzqy

Tester

hzpbxa