லங்காவி செல்பவர்களுக்கு எச்சரிக்கை! அலையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்!

top-news
FREE WEBSITE AD

லங்காவி, ஆகஸ்ட் 21: அடுத்த நான்கு நாட்களில் லங்காவியில் பந்தாய் செனாங் மற்றும் பந்தாய் தெங்காவை தாக்கும், அலைகள் 3 மீ உயரத்திற்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சுற்றுலாவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆபத்தான இடங்களை கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக லங்காவி குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரி கைருல் அஃபான் முகமட் யாயின் தெரிவித்தார்.

பந்தாய் செனாங் மற்றும் பந்தாய் தெங்காவில் கடற்கரை உயிர்காக்கும் காவலர்களால் எழுப்பப்பட்டுள்ள சிவப்புக் கொடி எச்சரிக்கைகளைப் பொதுமக்கள் கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று தொடங்கி நான்கு நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதிக அலை காரணமாக பொதுமக்கள் இந்த பகுதிகளிலிருந்து விலகிச் செல்ல சிவப்புக் கொடி வழிகாட்டியாக செயல்படும் என்று அவர் மோர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *