கால் காயத்தால் ஜப்பான் ஓபன் தொடரில் இருந்து விலகும் ஆரோன் சியா-சோ வூய் யிக்!

top-news
FREE WEBSITE AD

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆரோன் சியா-சோ வூய் யிக் காயம் காரணமாக அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜப்பான் ஓபனில் இருந்து விலகியுள்ளனர்.

ஒலிம்பிக் அரையிறுதியின் போது வூய் யிக்கு  காயம் ஏற்பட்டதாகவும், அவர் காலில்  வலியை அனுபவித்து வருகிறார்" என்றும் போட்டியில் இருந்து வெளியேறுமாறு மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் தேசிய பயிற்சி இயக்குனர் ரெக்ஸி தெரிவித்தார்.

கடந்த வாரம் பாரிஸிலிருந்து திரும்பிய இந்த ஜோடி, ஜப்பான் ஓபன் தொடருக்குத் தயாராகும் முன் ஒரு சிறிய இடைவெளி எடுக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தை தொடர்ந்து அவர் இந்த  தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது.

இருந்தாலும் வூய் யிக் எவ்வளவு விரைவாக குணமடைவார் என்பதைப் பொறுத்தே  கொரியா ஓபன் தொடரில் அவர்கள் பங்கேற்பது சாத்தியமாகும் என்றும் தேசிய பயிற்சி இயக்குனர் ரெக்ஸி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *