KL Masjid India Sinkhole – பகுதியைச் சரிபார்க்க 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம்! – அமைச்சர் தகவல்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 21: கடந்த மாதம் கோலாலம்பூர், ஜலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நிலஅமிழ்வில் மூழ்கி இந்திய மாது உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட Sinkhole பகுதியைச் சரிபார்க்க  மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

என்வே, அப்பகுதி வணிகர்கள் பொறுமையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான காலக்கெடு நியாயமானதாக கருதப்படுகிறது. (பயனர்களின்) பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக சங்கம் பொறுமையாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மஸ்ஜித் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் அமீர் அலி மைடினுக்கு ஜலிஹா விளக்கமளித்தார்.

டிந்து விழுந்த இடத்தில், பாதுகாப்பை மீட்டெடுக்கவும், வாடிக்கையாளர் போக்குவரத்தை இழந்ததால் ஏற்படும் பெரும் வணிக இழப்பைத் தடுக்கவும், பழுதுபார்க்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

வணிகங்கள் விற்பனையில் 80% வரை சரிவைச் சந்தித்துள்ளதாக அமீர் கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *