அரசாங்க மானியமாக கிழக்கு மலேசியா விமான டிக்கெட்டுகள் வெ.499 ஆக சலுகை கட்டணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 6-

பண்டிகைக் காலங்களில் சபா மற்றும் சரவாக்கிற்கு வீடு திரும்பும் மலேசியர்கள் அரசாங்கத்தின் விமானக் கட்டண மானியத் திட்டம் இல்லாவிட்டால், ஒவ்வொரு வழிக்கும் கிட்டத்தட்ட வெ.1,000 செலுத்த வேண்டியிருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

டிக்கெட் விலையை வெ.499 ஆகக் குறைக்கும் இந்தத் திட்டம், சீனப் புத்தாண்டு, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி, கவாய், காமதன், கிறிஸ்துமஸ் போன்ற கொண்டாட்டங்களுக்காக கிழக்கு மலேசியாவுக்குத் திரும்புபவர்களுக்கான பயணச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.

"மானியம் இல்லாமல்,கோலாலம்பூரிலிருந்து தவாவ், சண்டகான் அல்லது கோத்தா கினாபாலுவுக்கு ஒரு வழி கட்டணம் ஏறக்குறைய வெ.1,000 வரை எட்டக்கூடும்" என்று லோக் கேள்வி பதில் அமர்வின் போது நாடாளுமன்றத்தில் கூறினார். 2024 ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 2023 ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டின் போது கோலாலம்பூர்-சண்டகான் விமானங்களுக்கான சராசரி கட்டணம் வெ.907 ஆக இருந்தது என்று அவர் மேற்கோள் காட்டினார்.

கடந்த ஆண்டு, முந்தைய 1.99 உச்சவரம்பை விட அதிகமான விலையில் கிட்டத்தட்ட 27,000 விமான டிக்கெட்டுகளுக்கு மானியம் வழங்க போக்குவரத்து அமைச்சகம் வெ.11 மில்லியன் செலவிட்டதாக லோக் கூறினார்.குறைந்த விலை உச்சவரம்பு, அதிகரித்த விமானங்களின் எண்ணிக்கை காரணமாக இது 2025 ஆம் ஆண்டில் வெ.19.5 மில்லியனாக உயர்ந்தது.

பயணிகள் அரசாங்க உதவியைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் பயன்படுத்தப்படும் மானியத் தொகையைக் காண்பிப்பதில் அமைச்சகம் விமான நிறுவனங்களை ஈடுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *