7 மாத தெரு நாய் சிகிச்சை பெற மக்களிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா!

top-news
FREE WEBSITE AD

நேற்று முன்தினம்‌ இரவு தொழிலதிபர் ரத்தன் டாடா அவரது இன்ஸ்டாகிராம்‌ பக்கத்தில்‌ பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்‌. அதில்‌ தனது கால்நடை ஆஸ்பத்திரியில்‌ டிக்‌ காய்ச்சல்‌. ரத்த சோகை நோயால்‌ பாதிக்கப்பட்டுள்ள 7 மாத தெரு நாய்‌ சிகிச்சை பெற்று வருகிறது. அதற்கு அவசரமாக ரத்தம்‌ தேவைப்படுகிறது எனக்கூறி மும்பை மக்களிடம்‌ உதவி கேட்டு இருந்தார்‌.

தெரு நாய்க்காக தொழில்‌ அதிபர்‌ ரத்தன்‌ டாடா உதவி கேட்டது பொதுமக்கள்‌ இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்தன்‌ டாடாவுக்கு பிற உயிரினங்கள்‌ மீதான அன்பை பாராட்டி பலரும்‌ கருத்து பதிவிட்டனர்‌.

இநநிலையில்‌ நோயால்‌ பாதிக்கப்பட்ட நாய்க்கு ரத்தம்‌ கிடைத்துள்ளது. அது குறித்த பதிவையும்‌ ரத்தன்‌ டாடா அவரது இன்ஸ்டாகிராம்‌ பக்கத்தில்‌ பதிவிட்டு இருந்தார்‌. அந்தப் பதிவில்‌, எனது பதிவை பார்த்து உதவி செய்ய முன்வந்த மும்பைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *