குழாய் உடைந்ததால் நீர்த் தடை! கிள்ளான் - ஷா ஆலம் - பெட்டாலிங் பகுதிகளில் பாதிப்பு

top-news
FREE WEBSITE AD

சிலாங்கூரில் உள்ள கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஷா ஆலமில் உள்ள ஜாலான் புடிமான், பிரிவு 22 இல் நீர்க்குழாய் வெடித்ததால் தண்ணீர்த் தடையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுதுபார்க்கும் பணிகளுக்கு வழி வகுக்கும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு நீர் விநியோகம் தடைபட்டதாக ஆயர் சிலாங்கூர் கூறியது.

அவை நாளை அதிகாலை 4 மணிக்குள் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பழுதுபார்க்கும் பணிகள் முடிந்து, பிரதான நீர் விநியோக முறை சீரானவுடன், நுகர்வோருக்கு நீர் விநியோகம் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும்.

செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஓர் அறிக்கையில் ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறப்பு வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் வழி நீர் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *