1 லட்சத்து 80 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்த்த நீர் திருவிழா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 4: கோலாலம்பூரில் நடைபெற்ற, பாஸ் கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளான 'ரெய்ன் ரேவ் வாட்டர் மியூசிக் ஃபெஸ்டிவல்' எனப்படும் நீர் விழா சுமார் 1,80,000 பார்வையாளர்களை ஈர்த்து, 200 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சுற்றுலா வருவாயை ஈட்டியதாக ஒரு சுற்றுலா சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, மலேசிய உள்வரும் சுற்றுலா சங்கத்தின் தலைவர் மின்ட் லியோங், ஏப்ரல் 30 முதல் மே 2 வரை நடைபெற்ற இந்த விழா, உலகளாவிய சமூக ஊடக தளங்களில் 1.4 பில்லியன் கிளிக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.அந்தத் தரவுகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை லியோங் குறிப்பிடவில்லை.

இந்த நிகழ்வை வெறும் ஒரு பெரிய அளவிலான டிஸ்கோ என்று பாஸ் கட்சி வர்ணித்து, அரசாங்கத்திடம் கற்பனைத்திறன் மிக்க யோசனைகள் இல்லை என்று குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது இந்த அறிக்கை வந்துள்ளது.

இந்த நிகழ்வு மலேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று பாஸ் கட்சி ஜனவரியில் கூறியிருந்தது.

இந்த விழா சர்ச்சையை ஈர்த்ததை ஒப்புக்கொண்ட லியோங், புதுமை என்பது தவிர்க்க முடியாத சவால்களை எதிர்கொள்ளும் என்று கூறினார்.

சர்ச்சை காரணமாகப் பின்வாங்குவது, நாட்டின் முன்னோக்கிய உத்வேகத்தை இழக்கச் செய்யும், என்று கூறிய அவர், இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங்குக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *