சுங்கை பூலோவில் வீடு தீப்பற்றியதில் தந்தை - மகன் பலி!
- Shan Siva
- 11 Sep, 2025
கோலாலம்பூர், செப் 11: சுங்கை
பூலோவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வீட்டில் இருந்த
70 வயது முதியவரும் அவரது
மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவ் சிங் சாய்
மற்றும் அவரது மகன் 50 வயது காவ் ஸ்வீ ஃபட் ஆகியோர் கம்போங்
ஸ்ரீ இந்தாவில் உள்ள வீட்டில் இறந்து கிடந்ததாக சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீ விபத்து
குறித்து நள்ளிரவு 12.50 மணிக்கு தகவல்
கிடைத்ததாகவும், அதிகாலை 3.40 மணிக்குள் வீடு 80% எரிந்த நிலையில், தீயை
அணைத்ததாகவும் துறை தெரிவித்துள்ளது.
இரண்டு கார்களும்
தீ விபத்தில் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



