மூவாரில் வீட்டினுள் இறந்து கிடந்த தந்தையும் மகனும்!

top-news
FREE WEBSITE AD

மூவார், ஆகஸ்ட் 25: ஜொகூர் மூவாரில் முதியவர் மற்றும் ஊனமுற்ற அவரது மகனின் உடல்கள் சுங்கை அபோங்கில் உள்ள அவர்களது வீட்டில் இன்று கண்டெடுக்கப்பட்டன.

மதியம் 1 மணியளவில் போலீசார் வீட்டில் சோதனை நடத்திய பின்னர், 76 மற்றும் 37 வயதுடைய இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக மூவார் காவல்துறைத் தலைவர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.

பொதுமக்களில் ஒருவர் அண்டை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசில் புகார் செய்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு பேரும் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் முதியவரின் மகள் என நம்பப்படும் 44 வயதான ஒரு ஊனமுற்ற பெண்ணும் பலவீனமான நிலையில் காணப்பட்டதாக ரைஸ் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தப் பெண்ணும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *