திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை! ஜெல்லி மீன்களால் பக்தர்கள் அவஸ்தை!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவில் உள்ள பல்வேறு கடல்களில் பல வகையான ஜெல்லி மீன்கள் உள்ளன. சில சிறிய, தெளிவான குமிழ்கள் போல தோற்றம் கொண்ட மீன்கள் ஆகும்.

மற்றவை பெரியதாகவும், வண்ணமயமான குமிழ்கள் போல இவை இருக்கும். ஜெல்லி மீன்கள் தங்கள் இரையை தன் கூரான குமிழ்கள் மூலம் குத்தி தன்னுடைய இரையின்  உயிரை  முடக்கும். ஜெல்லி மீன்கள் மனிதர்களை பொதுவாக தாக்காது. ஆனால் ஜெல்லி மீன்கள் அருகே ஒருவர் நீந்தினால் அல்லது ஒருவரைத் தொட்டால் அல்லது அதன் மீது கால் வைத்தால் கூட ஜெல்லி மீன்கள் தங்கள் கூரான குமிழ்கள் மூலம் தாக்கி விஷத்தை வெளியிடும்.

ஜெல்லி மீன்களின் தாக்குதல்கள் வலிமிகுந்தவை என்றாலும், பெரும்பாலானவை மிக மோசமாக உடல்நிலை தாக்குதல்கள் அல்ல. இதனால் உடலில் வலி, சிவப்பு புள்ளிகள், அரிப்பு, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்றவை ஜெல்லி மீன் தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும். ஆனால் சில வகையான ஜெல்லி மீன்கள்  மிகவும் ஆபத்தானவை.

சமயங்களில் அவை உயிருக்கே ஆபத்தானவையாகவும் இருக்கலாம். இந்த ஜெல்லி மீன்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன. பொதுவாக ஜெல்லி மீன்கள் கடித்தால் கடிக்கப்பட்ட பகுதியை வினிகருடன் சேர்த்து கழுவ வேண்டும். வினிகர் ஒரு பலமான அமிலமாகும. ஜெல்லி மீன்கள் கடித்தால் கடிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி பூச வேண்டும் . இது பாக்ஸ் ஜெல்லிமீன்கள் போன்ற ஆபத்தான வகைகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

இந்த ஜெல்லி மீன்கள் காணப்படுவதால்தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் மக்கள் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கே எதிர்பார்த்ததை விட அதிகப்படியான ஜெல்லி மீன்கள் உலா வருவதால் கடலில் குளிப்பதற்கு  பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. திடீரென ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *