தேசிய அளவிலான தமிழ் மொழி திருவிழா!

top-news
FREE WEBSITE AD

நெகிரி செம்பிலான், ஜூலை 31: நெகிரி செம்பிலான் தமிழ்மொழி ஆசிரியர் கழகத் தலைவர் அன்பழகன் சுப்ரமணியம் ,  மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும்,  ஓம்ஸ்  அறவாரியத் தலைவருமான  ஓம்ஸ் பா. தியாகராஜனை சந்தித்து,  2024 தேசிய அளவிலான தமிழ் மொழி திருவிழாவிற்கு அழைப்பு  விடுத்தார்.

இச்சந்திப்பில் அவருடன் போர்ட்டிக்சன்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரவி  முனுசாமியும் கலந்துகொண்டார்.

மேலும், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், கல்வியமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

வரும் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை, நெகிரி செம்பிலானில் உள்ள சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இவ்விழாவில்,  10 போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  மாநிலம் முழுவதிலுமிருந்து மொத்தம் 450 மாணவர்கள்  கலந்துகொள்வார்கள் என்றும்  அன்பழகன் சுப்ரமணியம் தெரிவித்தார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *