சபா மாநிலத் தேர்தலில் இளம் வேட்பாளர்களையும் புதிய முகங்களையும் தேசிய முன்னணி நிறுத்தும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 11-

சபா மாநிலத் தேர்தலில் இளம் வேட்பாளர்களையும், புதிய முகங்களையும் தேசிய முன்னணி நிறுத்தும் என தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி இதனை கூறினார்.சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த சபா மாநிலத் தேர்தலில் பல புதிய வேட்பாளர்களை, குறிப்பாக இளைஞர்களை தேசிய முன்னணி நிறுத்தும்.அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக முன்னர் சிறந்த செயல்திறனைக் காட்டிய தற்போதைய பதவியில் இருப்பவர்களையும் கட்சி தக்க வைத்துக் கொள்ளும்,

கடந்த தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்ட பல பெயர்களைத் தக்கவைத்துக்கொள்வதோடு, பல புதிய முகங்களும். பல இளம் நபர்களும் இடம்பெறுவார்கள். மேலும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளில் அவர்களின் சேவைகள் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *