விவாதத்திலிருந்து விலகினார் டத்தோஸ்ரீ சரவணன்

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், மார்ச் 11: மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன், சமய போதகர் ஜம்ரி வினோத்துடன் இந்து மதம் குறித்த விவாதத்திற்கான தனது சவாலை வாபஸ் பெற்றுள்ளார்.

 இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங்கின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 இது தேசிய நல்லிணக்கத்திற்காக என்று அவர் தெரிவித்தார்.

இந்து மதத்தைப் பாதுகாப்பதற்காகவே விவாதத்திற்கான தனது அழைப்பு அமைந்ததாகவும், அதில் மதங்களை ஒப்பிடுவது சம்பந்தப்பட்டிருக்காது என்றும் சரவணன் கூறினார்.

இந்து மதம் குறித்த தனது கருத்துக்களை ஜம்ரிக்கு சொல்லி திருத்தி, அவருக்குக் கற்பிக்க விரும்பிதாக அவர் கூறினார்.

 அவர் (இந்து மதம் பற்றி) தவறாகக் கற்பிக்கப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவராக இருக்கலாம். அத்தகையவருக்குப் பாடம் புகட்டுவதே தனது நோக்கம் என்று அவர் கூறினார்.

நேற்று, சரவணனுக்கும் ஜம்ரிக்கும் இடையிலான முன்மொழியப்பட்ட விவாதம் ரத்து செய்யப்படும் என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் நம்பிக்கை தெரிவித்தார்.  மத வேறுபாடுகளில் அதிகமாக கவனம் செலுத்தும் விவாதங்கள் மலேசியாவின் பல மத சமூகங்களிடையே பதற்றத்தை அதிகரிக்கவும் உறவுகளை சீர்குலைக்கவும் வழிவகுக்கும் என்று கூறினார்.

Timbalan Presiden MIC, M. Saravanan, menarik balik cabaran debatnya dengan pendakwah Zamri Vinoth mengenai agama Hindu atas nasihat Menteri Perpaduan, Aaron Ago Dagang. Keputusan ini dibuat demi keharmonian nasional dan mengelakkan ketegangan antara masyarakat pelbagai agama di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *