பத்து பூத்தே விவகாரம்... விசாரணை அறிக்கை பேரரசரிடம் ஒப்படைக்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, ஜுன்‌ 19- பத்து பூத்தே, மிடில்‌ ரோக்ஸ்‌, சவுத்‌ லெட்ஜ்‌ பாறைத்‌ திட்டுகள்‌ மீதான இறையாண்மை விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம்‌ (ஆர்சி) தனது அறிக்கையை மாட்சிமை தங்கிய மலேசியப்‌ பேரரசர் ‌சுல்தான்‌ இப்ராஹிமிடம்‌ ஒப்படைத்துள்ளது.

'பேரரசரிடம்‌ ஆர்சிஐ ஆணையத்தின்‌ தலைவர்‌ துன்‌ முகமது ராவுஸ்‌ ஷரிப்‌ அந்த அறிக்கையை இஸ்தானா நெகாராவிடம்‌' நேற்று   சமர்ப்பித்தார்‌ என்று சுல்தான்‌ இப்ராஹிமின்‌ முகநூல்‌ பக்கத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது..

அரச ஆணையத்தை உடனடியாக அமைப்பதற்கு சுல்தான்‌ இப்ராஹிம்‌ இசைவு தெரிவித்தார்‌ என்று பிரதமர்துறையின்‌ சட்ட விவகாரப்‌ பிரிவு கடந்த பிப்ரவரியில்‌ தெரிவித்திருந்தது. 1950ஆம்‌ ஆண்டு விசாரணை ஆணையங்கள்‌ சட்டத்தின்கீழ்‌ அது அமைக்கப்பட்டது.

பத்து பூத்தே மீதான இறையாண்மை சிங்கப்பூருக்குச்‌ சொந்தம்‌ என்றும்‌ அங்கிருந்து சுமார்‌ 1 கிலோ மீட்ட தொலைவில்‌ உள்ள மிடில்‌ ரோக்ஸ்‌ மலேசியாவுக்குச்‌ சொந்தம்‌ என்றும்‌ அனைத்துலக நீதிமன்றம்‌ கடந்த 2008ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ 23ஆம்‌தேதியன்று தீர்ப்பளித்தது. பத்து பூத்தேவிலிருந்து சுமார்‌ நான்கு கிலோ மீட்டர்  தொலைவில்‌ உள்ள சவுத்‌ லெட்ஜ்‌ பாறைத்‌ திட்டு எந்த நாட்டின்‌ கடல்‌ எல்லைக்குள்‌ உள்ளதோ அந்த நாட்டுக்கே அது சொந்தம்‌ என்றும்‌ அது தனது தீர்ப்பில்‌ கூறியிருந்தது.

அனைத்துலக நீதிமன்றம்‌ அளித்த அத்தீர்ப்பைச்‌ சீராய்வு செய்யக்கோரி கடந்த 2017ஆம்‌ ஆண்டு பிப்ரவரி 2ஆம்‌ தேதியன்று மலேசியா விண்ணப்பம்‌ செய்தது. ஆயினும்‌, 2018ஆம்‌ ஆண்டு மே மாதத்தில்‌ பிரதமர்‌ துன்‌ டாக்டர்‌ மகாதீர்‌ முகமது தலைமையிலான பக்காத்தான்‌ ஹராப்பான்‌ அரசாங்கம்‌ அதனை மீட்டுக்‌ கொண்டது. அந்த சீராய்வு மனு மீதான விசாரணை தொடங்குவதற்கு இரண்டுவாரங்களே எஞ்சியிருந்த வேளையில்‌, திடீரென்று மகாதீரின்‌ அரசாங்கம்‌ அதனை மீட்டுக்‌ கொண்டது.

அந்த மனு மீட்டுக்‌ கொள்ளப்பட்டதற்கான காரணத்தை மலேசியர்கள்‌ குறிப்பாக ஜொகூர்‌ மக்கள்‌ அறியவிரும்புவதால்‌, அரச ஆணையம்‌  அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர்துறை சட்டம்‌ மற்றும்‌ துறைசார்‌ சீர்திருத்தம்‌ அமைச்சர்‌ டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான்‌ கடந்த பிப்ரவரி 27ஆம்‌ தேதியன்று கூறியிருந்தார்‌. இம்மாதம்‌ 12ஆம்‌ தேதியன்று நடைபெற்ற ஆர்சிஐ விசாரணையில்‌ டாக்டர்‌ மகாதீரும்‌.நேரடியாக முன்னிலையாகி சாட்சியம்‌ அளித்தார்‌!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *