பத்து பூத்தே விவகாரம்... நான் மட்டும் காரணம் அல்ல! – மகாதீர்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: பத்து பூத்தே வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் (IJC) தீர்ப்பை ரத்து செய்வதற்கான முயற்சியைத் திரும்பப் பெற, தாம்  ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்ததாக  கூறப்படுவதை துன் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார்.

மேலும் இந்த வழக்கு மிகவும் பலவீனமாக உள்ளதாக முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் விளக்கமளிக்கும் அமர்வுகளுக்குப் பின்னர் அமைச்சரவை கூட்டாக இந்த முடிவை எடுத்ததாக மகாதீர் கூறினார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஐந்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் மலேசியாவின் வழக்கு பலவீனமானது என்பதைத் தெளிவுபடுத்திய குயின்ஸ் ஆலோசகர் (QC) ஆகியோரின்  பல்வேறு ஆவணங்களின் ஆலோசனையும் இதில் அடங்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் என்ற முறையில் தனக்கு அதிகாரம் இருந்தாலும், அமைச்சரவைதான் முடிவு செய்தது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *