மகளிடம் பாலியல் வன்மம்! தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
- Shan Siva
- 24 Jun, 2024
மகளிடம் பாலியல் வன்மம்!
தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
ஈப்போ, ஜூன்
24: கடந்த வியாழன் அன்று தனது பதின்ம வயது மகளை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை
செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வளர்ப்புத் தந்தை மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில்
குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி ஹில்மியா யூசோப்
முன்னிலையில் சம்பந்தப்பட்ட அந்த 49 வயது நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்
பாதிக்கப்பட்ட 18 வயது சிறுமியை பாலியல் நோக்கங்களுக்காக அணுகியது கண்டறியப்பட்டது..
ஜூன் 20 ஆம் தேதி மதியம்
12.30 மணியளவில் இங்குள்ள தாமன் ஸ்ரீ ரபாத்தில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இந்தக்
குற்றம் நிகழ்ந்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக
20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி வழங்கப்படும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *