கமலை பிரிந்ததன் காரணம் சொல்கிறார் கௌதமி!

top-news
FREE WEBSITE AD

திரைத்துறையில் இருப்பவர்களில் அதிகம் சர்ச்சைகளை சம்பாதித்தது கமல் ஹாசனாகத்தான் இருக்க முடியும். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரிடம் பல முறை விமர்சனத்தை சந்தித்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கமல், தனது மனம் எப்படி வாழ விருப்பப்பட்டதோ அதன் போக்கில் தன் வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்டவர். அந்த தைரியத்தையும் ஒருதரப்பினர் பாராட்டிவருகின்றனர்.

 கமல் ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். அந்த உறவிலிருந்து வெளியேறிய கமல் அடுத்ததாக ரேகாவை திருமணம் செய்துகொண்டார். இருவருகும் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை ரேகாவையும் பிரிந்தார் கமல். தொடர்ந்து கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் வசித்தார். ஆனால் அந்த உறவும் பாதியில் முடிந்தது.

கமல் ஹாசனும் கௌதமியும் எதற்காக பிரிந்தார்கள் என்று ரசிகர்கள் நீண்ட காலமாகவே சந்தேகப்பட்டுவந்தார்கள். இந்நிலையில் கௌதமி சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும்போது அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள தேவையில்லை. இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது நீண்ட காலம் நீடிக்கும். எந்தவிதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரு மையப்புள்ளி இருக்கும். இரண்டு பேரும் அந்த மையப்புள்ளியை 50 சதவீதம் தாண்டக்கூடாது. நான் இதை என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்றிருக்கிறேன்" என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *