பூடி95 திட்டத்தின் வாயிலாக மாதத்திற்கு 200 ரிங்கிட் வரை சேமிக்கலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 25-

புதியதாக அறிமுகமாகும் பூடி95 திட்டத்தின் வாயிலாக மாதத்திற்கு 200 ரிங்கிட் வரை சேமிக்கலாம் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா கூறினார்.தகுதியுள்ள மக்களுக்கு பூடி95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் விற்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது மாதத்திற்கு தோராயமாக 200 ரிங்கிட் வரை சேமிப்பை வழங்கும்.மேலும் ரோன் 95 விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகக் குறைப்பது,
மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க தொடர்ந்து உதவுவதற்கான அரசாங்கத்தின் உறுதியைப் பிரதிபலிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உண்மையில் பூடி95 மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவில் கவனம் செலுத்தியுள்ளார்.மக்கள் தங்கள் வாழ்க்கைச் செலவை நிர்வகிக்க உதவும் நம்பிக்கையில், வாக்குறுதியளிக்கப்பட்டபடி விலையை 1.99 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில அல்லது இரண்டு மாதங்களில், ரோன்95 இன் தற்போதைய விலை 2.60 ரிங்கிட் முதல் 2.75 ரிங்கிட் வரை உள்ளது. எனவே பெட்ரோல் நிலையத்தில் வாங்கும்போது, அரசாங்கம் உண்மையில் மிகப் பெரிய மானியத்தை வழங்கியுள்ளது.2.60 ரிங்கிட் பெட்ரோல் என்றால் மக்களுக்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 183 ரிங்கிட் சேமிப்பு உள்ளது.அதுவே விலை 2.75 ரிங்கிட் என்றால், சேமிப்பு மாதத்திற்கு 228 ரிங்கிட் ஆகும்," என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *