டீசல் மானியங்களில் இருந்து வரும் சேமிப்பு மக்களுக்கே திருப்பிவிடப்படும்! - பிரதமர்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 11: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியங்களில் இருந்து வரும் சேமிப்பு, குறிப்பாக மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து மற்றும் ரஹ்மா பணப் பங்களிப்பு (STR) மூலம் மக்களுக்கு திருப்பி விடப்படும் என்று அறிவித்தார்.

இலக்கு வைக்கப்பட்ட மானியம் ஒரு பிரபலமான நடவடிக்கை அல்ல என்பதை ஒப்புக்கொண்டு, நிதியமைச்சராக இருக்கும் அன்வார், இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு RM4 பில்லியன் சேமிக்கப்படும் என்றும், செயல்படுத்தப்படுவதற்கு முன்பு பல நிலைகளில் முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

சேமிப்பு (இலக்கு டீசல் மானியங்களில் இருந்து) பொதுப் போக்குவரத்துத் தேவைகளை ஆதரிக்கும்.

இலக்கு மானியத்திலிருந்து வரும் நிதியானது, அமைச்சர்களின் கொடுப்பனவுகள் அல்லது பிற நலன்களை அதிகரிப்பதற்காக அல்ல; மாறாக மக்களுக்கு உதவுவதே முதன்மை நோக்கம் என்று அவர் இன்று நிதி அமைச்சு  ஊழியர்கள் உடனான கூட்டத்தின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *