ரஜினிகாந்த்துடன் ஆசீர்வாதம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து லாரன்ஸ் மாஸ்டர் மகிழ்ச்சி!

top-news
FREE WEBSITE AD

ரஜினி ராகவேந்திரா சாமியின் தீவிர பக்தர் என்பதாலே லாரன்ஸும் தீவிர ராகவேந்திரா பக்தராக உள்ளார். நடனக்கலைஞராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய லாரன்ஸ் அதன் பின்னர் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். தனது நடிப்புத் திறமையால் மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்று வளர்ந்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான பாண்டி, முனி போன்ற படங்கள் குடும்பப் பெண்கள் மத்தியில் லாரன்ஸை கொண்டு சென்றது. இதன் காரணமாகவே லாரன்ஸ் படங்களுக்கு இன்றைக்கும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது எனலாம்.

பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட ராகவா லாரன்ஸ் கடந்த மே 1ஆம் தேதி மாற்றம் என்ற அறக்கட்டளையை நிறுவி மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். மேலும் தன்னிடம் உதவி எனக் கேட்கும் நபர்களுக்கு நேரடியாகச் சென்று உதவும் தன்மை கொண்ட நகைச்சுவைக் கலைஞர் பாலாவுடன் இணைந்தும் உதவி செய்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சென்னை, போயஸ்கார்டனில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மேலும் தனது மாற்றம் அறக்கட்டளை தொடர்பான விவரங்களைச் சொல்லி ஆசிர்வாதமும் வாங்கியுள்ளார். இதுதொடர்பான தகவலை லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மாற்றம் அறக்கட்டளை தொடங்கப்பட்டபோது ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *