தனுஷ் என்ன மாதிரியான டைரக்டர் என்பதை ராயன் திரைப்படம் சொல்லும் - எஸ் ஜே சூர்யா!

top-news
FREE WEBSITE AD

பெரிதும் எதிர்பார்ப்பில் முன்னதாக ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், இந்தியாவில் தேர்தல் நடைபெற்றதால் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதிக்கு திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

இந்நிலையில், வெற்றிமாறனுடன் பல படங்களில் வேலை பார்த்த தனுஷ் இந்த படத்தை எதார்த்தமாக எடுத்துள்ளதாக படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு இரண்டரை மணி நேர படத்தில் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள முக்கிய விசயத்தை வைத்து ஒரு படமாக கொடுக்க முடியுமா என்றால் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம். அந்த விஷயத்தை தனுஷ் அசால்ட் ஆக செய்து காட்டியுள்ளார். ராயன் படம் வெளியானதும், ரசிகர்கள் தனுஷ் என்ன மாதிரியான டைரக்டர் என்பதை புரிந்து கொள்வார்கள் என சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்ஜே சூர்யா பேசியிருந்தார். முன்னதாக இந்த படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தாலும் பரவாயில்லை வாங்குங்கள் என்று கலாநிதி மாறன் சொல்லும் அளவுக்கு படம் தாறுமாறாக இருப்பதாக கூறி வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *