ஆற்றில் கவிழ்ந்த கார்! குழந்தைகளைக் காப்பாற்றிய பொதுமக்கள்!

top-news
FREE WEBSITE AD

Bagan serai சாலையில் விபத்துக்குள்ளான வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது, சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் வாகனத்தில் இருந்தவர்களை உடனடியாக மீட்டனர். 4 நான்கு குழந்தைகளும் இரு பெண்களும் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதி ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக Kerian மாவட்டக் காவல் ஆணையர் Juna Yusoff தெரிவித்தார். மாலை 4 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மயங்கிய நிலையில் 2 குழந்தைகள் Parit Buntar பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என அவர் உறுதிப்படுத்தினார்.  சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் துரிதமாகச் செயல்பட்டதில் விபத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக Juna Yusoff தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *