நீங்கள் தமிழைப் புறக்கணித்தால் நான் உங்களைப் புறக்கணிப்பேன்! – அ.சிவநேசன் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் அவர்களின் வணிகங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்குவதை முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டுமென பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் தமிழ் மொழியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ் இல்லாததும் தமிழர்களின் வணிகங்களில் தமிழ் இல்லாத நிலை வருமானால் அவர்கள் தமிழைப் புறக்கணிப்பதாக எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் தமிழைப் புறக்கணித்தால் நானும் அவர்களைப் புறக்கணிக்கிறேன் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களும் தமிழ் அறிந்த இந்தியர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தினார். இங்கு தமிழ் இல்லை, அங்கு தமிழ் இல்லை என அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழைத் தொட்டுக்கொள்பவர்கள் பிறமொழிகளுக்கு முன்னுரிமை வழங்கினால் அவர்களுக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை வெளிப்படுவதாகத் தாம் உணர்வதாக அவர் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Sivanesan Achalingam தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *