bajau laut வீடுகளை எரிப்பது மலேசியாவுக்குக் களங்கம்!

top-news
FREE WEBSITE AD

சபா, ஜூன் 7: முன்னாள் சபா துணை முதல்வர் செம்போர்னாவில் உள்ள bajau laut சமூகத்தை வெளியேற்றுவதை ஆதரித்த நிலையில்,  இடிந்த வீடுகளை எரிப்பதை விமர்சித்துப் பேசியுள்ளார்.

பஜாவ் லாட் குடும்பங்களின் வீடுகளை எரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டது என வாரிசான் சட்டமன்ற உறுப்பினர் Jaujan Sambakong கூறினார்.

துன் சாகரன் கடல் பூங்காவில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்படுவது சரியானது என்ற போதிலும், அவர்கள் மிகவும் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர்கள் குடிமக்களாக இல்லாவிட்டாலும், இந்த விஷயங்களைக் கையாள ஒரு சிறந்த அணுகுமுறை தேவை, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


வாரிசான் துணைத் தலைவரான Jaujan Sambakong, பஜாவ் லாட் நாடோடி மக்கள் என்றும், அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விதிகளால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *