ரபின்ஹா இரட்டை கோல்: பார்சிலோனா 5-0 இல் அத்லெடிக் பில்பாவை வீழ்த்தி சூப்பர் கோப்பை இறுதிக்கு முன்னேற்றம்

top-news

சவூதி அரேபியா, ஜன. 8-

ரபின்ஹா இரண்டு கோல்கள் அடித்து அசத்திய நிலையில், பார்சிலோனா அத்லெடிக் பில்பாவை 5-0 என்ற கணிசமான கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இப்போட்டி இன்று அதிகாலையில் நடைபெற்றது.

தற்போதைய சாம்பியனும், சாதனை அளவில் 15 முறை கோப்பையை வென்றவர்களுமான பார்சிலோனா, இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அல்லது அத்லெடிகோ மாட்ரிட் ஆகியவற்றில் ஒன்றை எதிர்கொள்ளும். அந்த அணிகள் நாளை அதிகாலையில் மோதுகின்றன. இறுதிப் போட்டி இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

பயிற்சியாளர் ஹான்சி பிளிக், இளம் நட்சத்திரம் லமீன் யமாலை ஆரம்பத்தில் பெஞ்சில் அமர வைத்த போதிலும், அவரது அணி ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

லா லிகா தரவரிசையில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா, அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. அதேநேரம், கடினமான சீசனை கடந்து வரும் அத்லெடிக் பில்பாவோ கடுமையாக தோற்றது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *