பேருந்து விபத்து! 33 பயணிகள் காயம்! – ஈப்போ

top-news
FREE WEBSITE AD

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 31 பயணிகளுடன் பயணித்த இரண்டு மாடி சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும் 2 ஓட்டுநர்கள் உட்பட 10 பயணிகள் காயமடைந்ததாகவும் பேராக் மாநில மீட்புப் படை ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1.10 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளாகியதாகவும், விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 273 ஆவது கிலோ மீட்டரில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் மூவர் இன்னமும் அவசரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *