ஜேடிதி பாங்காக் யுனைடெட் அணியை 4-0 என வீழ்த்தி அபார வெற்றி

top-news

இஸ்கன்டர் புத்ரி, செப். 26-

செய்தி-வெற்றி மைந்தன்

ஜொகூர் டாருல் தக்ஸிம் அணி, தாய்லாந்தின் பாங்காக் யுனைடெட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப் குரூப் B போட்டியில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டி சுல்தான் இப்ராகிம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த வெற்றி, ஜேடிதி அணியின் இரண்டாவது வெற்றியாகும். இதன் மூலம், ஆறு புள்ளிகளுடன் குரூப் பி-இல் முதலிடத்தில் உள்ளது. ஜேடிதி அணியின் ஆதிக்கம் முழுமையாக வெளிப்பட்ட இந்தப் போட்டி, அவர்களின் திறமையை ஆசிய அரங்கில் மீண்டும் நிரூபித்தது.

எனினும், போட்டியின் 16-ஆவது நிமிடத்தில் ஜேடிதி அணி ஒரு பதற்றமான தருணத்தை எதிர்கொண்டது. தென் கொரியாவைச் சேர்ந்த நடுவர் கிம் ஹீ-கோன், ஜேடிதி வீரர் ஜான் இராஸபால், பாங்காக் யுனைடெட் வீரர் முஹ்சென் அல்-கசானுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டதாகக் கருதி, பெனால்டி வழங்கினார். ஆனால், வீடியோ உதவி நடுவர் மூலம் மறு ஆய்வு செய்த பின்னர், கிம் ஹீ-கோன் தனது முடிவை ரத்து செய்தார். இதனால், டோட்சவான் ஸ்ரிபான் பயிற்சியாளராக உள்ள பாங்காக் யுனைடெட் அணிக்கு பெனால்டி கிடைக்கவில்லை.

இந்த முடிவு JDT அணிக்கு பெரும் நிம்மதியை அளித்தது. அதன்பின், அவர்கள் தங்கள் ஆட்டத்தை மேலும் மெருகேற்றி, நான்கு கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *