PAKATAN கடந்து வந்த பாதையை மறந்துவிட்டது! DATUK AMBIGA எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

Pakatan Harapan ஆட்சியமைத்ததும் கடந்த காலச் சீர்த்திருங்களை மறந்துவிட்டதாக BERSIH அமைப்பின் முன்னாள் தலைவர் Datuk Ambiga Sreenevasan குற்றம் சாட்டியுள்ளார். நேற்று முந்தைய நாள் KLSCAH அரங்கில் BERSIH அமைப்பின் மாநாடு நடத்தப்பட்டது. பெர்சே அமைப்பின் தொடங்கியது முதல் கடந்த பொதுத் தேர்தல் வரையில் பக்காத்தான் தலைவர்கள் பெர்சேவுடன் இணைந்து பணியாற்றியதை அதன் முன்னாள் தலைவர் Datuk Ambiga Sreenevasan நினைவுருத்தினார்.

ஆனால் தற்போது பக்காத்தான் ஆட்சியில் அமர்ந்ததும் தேர்தல் முறைகேடு, அரசு தரப்பு நியமனங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிலும் முக்கியத் தலைமை பொறுப்புகளில் அரசியல் ஆதரவுப் பின்னணியில் உள்ளவர்களை நியமிப்பது என தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது முந்தைய பக்காத்தான் செயல்பாடுகளுக்கு முரணாக இருப்பதாகவும் இதனால் ஆட்சிக்கான மாண்பைப் பக்காத்தான் இழந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதே போல பக்காத்தான் ஆட்சி நீடித்தால், அடுத்தடுத்து வரும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஆதரவைப் பெற முடியாமல் போகும் என Datuk Ambiga Sreenevasan எச்சரித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *