தேர்தல் பிரச்சாரத்தில் பரஸ்பர விமர்சனம் இயல்பு – Ismail Sabri
- Surendran Sumdraraj
- 10 Jul, 2026
கோத்தா திங்கி, ஜூலை 10-
ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய அரசை அமைக்கும் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சிப்பது இயல்பானது என்றும், அது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது என்றும் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
பிரச்சார காலத்தில் கட்சிகள் வேறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைப்பது அசாதாரணமான ஒன்றாக பார்க்கப்படக் கூடாது என அவர் கூறினார்.
அந்தக் கட்சிகள் அரசாங்கத்தில் ஒன்றாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் தங்கள் கொள்கைகள், கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகளை மக்களிடம் விளக்குவது ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்றார்.
இத்தகைய சூழ்நிலை தாம் பிரதமராக இருந்த காலத்திலும் ஏற்பட்டதாக Ismail Sabri நினைவூட்டினார்.
அப்போது பிற கட்சிகள் இணைந்து அரசாங்கத்தில் இருந்தாலும், தேர்தல் நேரங்களில் வேறுபட்ட பிரசார அணுகுமுறைகள் இருந்ததாக அவர் கூறினார்.
மலாக்கா தேர்தலை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்தாலும், பின்னர் அமைச்சரவை கூட்டங்களில் அனைவரும் தொழில்முறை முறையில் பணியாற்றியதாக விளக்கினார்.
இதனால், பிரச்சார மேடைகளில் இடம்பெறும் அரசியல் விமர்சனங்கள், அரசாங்கத்தின் செயல்பாட்டை பாதிக்கும் என கருதத் தேவையில்லை என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



